Wednesday, July 7, 2010

ஈரம்

முத்தமிட்ட ஈரம் காயுமுன்
ரத்தக் குழல்
கருக வைத்தது
உன் காதலாய் தான்
இருக்கும்.

காதலிக்கத் தான்

உன்னை பார்க்கும் போதெல்லாம்
தோன்றும் எண்ணம்...

"என் பிறப்பே
உன்னை காதலிக்க தானோ"

வேலன்.

தமிழ் கற்றுக் கொள்கிறேன்

தமிழ் கற்று கொள்கிறேன்...
அரைகுறையாய்
அது ஒன்று தான் தெரியும்.

அதை வைத்தாவது
உன்னைக் கவர முடியுமா
என்றொரு

நப்பாசை.


வேலன்

முடியா கவிதை

இங்கு தான் இருக்கிறேன்
என் இதயம் மட்டும்
ஏதோ ஓர் ஏகாந்த வெளியில்...



உன்னோடு தான் என்று
சொன்னால் தான்
இந்த கவிதை முடியுமா.

காதலிக்கலாம் வா.

போதுமடி நான்
கவிதை எழுதி கிழித்தது
காதலிக்கலாம் வா.

ஒற்றைக்கால் தவம்

எதையும் பொறுமையாய்
செய்ததில்லை.
பள்ளி நாட்களிலும்...
வேலைக்கு செல்லும்போதும்...
ஆனால்
நீ கடந்துபோகும் நொடிக்கு
இருமணி நேரம்
ஒற்றைக்கால் தவம் இருக்கிறேன்.

வேலன்.

திருவீதி உலா
பார்த்திருப்போம்.
என் வீதியில் நீ
போனது
நிலாவீதி உலா.