இந்திரையோ இவள் சுந்தரியோ..
தெய்வ ரம்பையோ ஊர்வசியோ..
இதை திரைப் பாடலாய் கேட்டிருக்கிறேன்
குற்றால குறவஞ்சியில் படித்திருக்கேன்.
அர்த்தம் புரிந்து
உணர்ந்தது
உன்னைப் பார்த்த நாளில்...
இப்போது
குற்றால குறவஞ்சி படித்தாலே
வசந்த வல்லிக்கு பதிலாய்
உன்னை எண்ணி கொள்கிறேன்.
Sunday, August 15, 2010
Saturday, July 31, 2010
Monday, July 26, 2010
கவி எழுது
ஒரு தோழமையில் அறிவுரை
காதலை பற்றி மட்டும்
எழுதாமல்
சற்று இயற்கையை எழுதுஎன...
இயற்கையும் செயற்கையும்
யோசனையும் மறப்பும்
நீயாகி போனதால்
எனக்காக எழுதேன்
ஒரு கவி.
காதலை பற்றி மட்டும்
எழுதாமல்
சற்று இயற்கையை எழுதுஎன...
இயற்கையும் செயற்கையும்
யோசனையும் மறப்பும்
நீயாகி போனதால்
எனக்காக எழுதேன்
ஒரு கவி.
Thursday, July 15, 2010
Wednesday, July 7, 2010
முறைத்தாவது பார்
கோபத்தில் முறை..
எரிச்சலில் கண்களால் எச்சரி..
சோகத்தில் கண்களில்
நீர் தளும்பு.
எதுவாயினும்
/*உன் அருகாமை தேடிவந்த */
என்னை
ஒரு தரமேனும் பார்.
எரிச்சலில் கண்களால் எச்சரி..
சோகத்தில் கண்களில்
நீர் தளும்பு.
எதுவாயினும்
/*உன் அருகாமை தேடிவந்த */
என்னை
ஒரு தரமேனும் பார்.
உன்னை சார்ந்த காதல்
தோல்வியில் தான்
கவிதை வருமென்றால்
எனக்கு கவிதையே வேண்டாம்.
இப்போதும் கூட பாரேன்
எனக்கு காதல் வேண்டாமென
சொல்ல முடியவில்லை.
ஏனெனில்
காதல் உன் சார்ந்த
விஷயமாகி போனது.
வேலன்
கவிதை வருமென்றால்
எனக்கு கவிதையே வேண்டாம்.
இப்போதும் கூட பாரேன்
எனக்கு காதல் வேண்டாமென
சொல்ல முடியவில்லை.
ஏனெனில்
காதல் உன் சார்ந்த
விஷயமாகி போனது.
வேலன்
Subscribe to:
Posts (Atom)